செய்திகள்
விபத்து

காட்டுமன்னார்கோவில் அருகே விபத்து- விவசாயி பலி

Published On 2020-05-21 17:16 IST   |   Update On 2020-05-21 17:16:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீமுஷ்ணம்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறுநாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்க துரை (வயது 37) விவசாயி.

இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லால்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் தங்கதுரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவ இடத்தில் காயம் அடைந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

அங்கு தங்கதுரை சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் விபத்தில் காயம் அடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News