செய்திகள்
நகை பறிப்பு

பெண்ணாடம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

Published On 2020-05-21 11:07 GMT   |   Update On 2020-05-21 11:07 GMT
பெண்ணாடத்தில் முகமூடி அணிந்த 2 பேர் பெண்ணிடம் 10 பவுன் தாலி செயினை பறித்த சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள இருமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32) விவசாயி. இவரது மனைவி ராஜேஷ்வரி (26). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

நேற்று வழக்கம் போல் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டனர். கொளுத்தும் வெயில் காரணமாக ராஜேஷ்குமார் வீட்டின் வரண்டாவில் வெளியே படுத்து தூங்கினார். அவரது மனைவி ராஜேஷ்வரி மற்றும் 2 வயது குழந்தையுடன் வீட்டின் உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 1 மணிக்கு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர்.

வீட்டின் உள்ளே புகுந்த அவர்கள் தூங்கி கொண்டிருந்த ராஜேஷ்வரியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை நைசாக எடுத்தனர்.

மேலும் அவர் காதில் கிடந்த கம்மலையும் கழட்ட முயன்றனர். திடுக்கிட்டு எழுந்த ராஜேஷ்வரி முகமூடி கொள்ளையர்களை பார்த்த தும். திருடன், திருடன் என கூச்சல் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று திரண்டனர். சுதா ரித்து கொண்ட 2 முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டினர். அப்போது அவர்கள் சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் நகையுடன் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொ) கிருபா லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக் மோப்பநாய் வர வழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News