செய்திகள்
திருட்டு

ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு

Published On 2020-05-20 12:47 GMT   |   Update On 2020-05-20 12:47 GMT
ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்:

ராமநத்தம் அடுத்துள்ள கல்லூர் ரோட்டை சேர்ந்தவர் பொற்கைபாண்டியன்(வயது 60). விவசாயி. இவர் தற்போது கல்லூர் அருகே மயிலாடும்புரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரவு நேரத்தில் மட்டும் கல்லூர் ரோட்டில் உள்ள தனது வீட்டில் வந்து பொற்கைபாண்டியன் தங்குவார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், இரவில் அவர் தங்குவதற்கு வரவில்லை. இதை பயன்படுத்தி வீட்டின் கதவை உடைத்து, 2½ பவுன் நகை, 300 கிராம் வெள்ளியை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. திருட்டு நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News