செய்திகள்
கடலூர் அருகே கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய வியாபாரி
கடலூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரும்பு தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சிய ஒருவரை மட்டும் போலீசார் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
கடலூர்:
கடலூர் அருகே சமட்டிக்குப்பம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டெல்டா பிரிவு சப்இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 3 பெரிய பேரலில் சாராயம் காய்ச்சும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது பலர் தப்பி சென்று விட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான சமட்டிக்குப்பம் சேர்ந்த பாலமுருகன் வயது 37 என்பவர் மட்டும் பிடிபட்டார்.
மேலும் 600 லிட்டர் சாராயம், பானைகள், கேன் போன்றவற்றை பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு போலீசிடம் டெல்டா பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.