செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் போலீசை தாக்கி கொலை மிரட்டல்- 3 பேர் கைது
நெல்லிக்குப்பத்தில் பால் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்த போலீசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜீ (வயது 32). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் காவலராக இருந்து வருகிறார்.
இவர் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபரில் ஒரு வாலிபர் காவலர் ராஜூவை இடித்துக் கொண்டு நின்றார். இதனை தட்டிக்கேட்ட காவலர் ராஜுவை 3 வாலிபர்கள் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த ராஜீ கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் காவலர் ராஜீ கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் அண்ணா நகர் சேர்ந்தவர்கள் ஜெய சீலன் (வயது 29), சேரன் (வயது 24), ராஜ்குமார் (வயது 28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.