செய்திகள்
சிதம்பரம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்- அடித்து கொலையா?
சிதம்பரம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த மீதிகுடியிருப்பு பகுதி யில் உள்ள ரெயில் தண்ட வளத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஆண் பிணம் கிடந்தது. இந்த பிணத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிதம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிதம்பரம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 20) என்பது தெரியவந்தது. சிவராமன் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் அவரது உடலை வீசி சென்றனரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.