செய்திகள்
கைது

நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2020-05-19 11:04 GMT   |   Update On 2020-05-19 11:04 GMT
நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே காராமணி க்குப்பத்தை சேர்ந்தவர் தேவா (வயது 28). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை கடத்தி சென்றார்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கடந்த 2 வருடமாக தேவாவை தேடி வந்தனர். கடந்த 2 வருடம் கழித்து கடத்தி செல்லப்பட்ட பெண்ணை திருமணம் செய்து ஒரு வயது பெண் குழந்தையுடன் தேவா சொந்த ஊரான காரா மணிக்குப்பத்திருக்கு வந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா சம்பவ இடத்திற்கு சென்று தேவாவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காரமணிக் குப்பத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து அழைத்து சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் எனது மாமியார் வீட்டில் சமரசம் அடைந்ததால் மீண்டும் காராமணிக்குப்பத்திற்கு வந்தேன். 

இவ்வாறு கூறினர். 

இதனைத்தொடர்ந்து தேவாவை நெல்லிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். அப்போது கடத்தி செல்லப்பட்ட தேவாவின் மனைவி மற்றும் அவரது ஒரு வயது குழந்தை  போலீஸ் நிலையத்தில் பரிதாபமாக நின்றுக்கொண்டிருந்த சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News