அம்மா உணவகங்களில் சு.ரவி எம்.எல்.ஏ. ஆய்வு
வாலாஜா:
ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக சு.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து வாலாஜா ராணிப்பேட்டை நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகத்தில் சமைத்து வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வந்த பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கினார்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், நகர செயலாளர்கள் வாலாஜா மோகன், என்.கே.மணி, வாலாஜா முன்னாள் நகரமன்றத் தலைவர் வேதகிரி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி, அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார், ஒன்றிய செயலாளர் விகே.ராதாகிருஷ்ணன், அம்மூர் நகர செயலாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர் வலிஅகமது, வாலாஜா நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, ராணிப்பேட்டை நகர அவைத்தலைவர் குமரன் உள்பட பலர் உடனிருந்தனர்.