செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே கன்னிவலை வைத்து முயல் பிடிக்க முயன்ற 3 பேர் கைது

Published On 2020-05-12 11:24 GMT   |   Update On 2020-05-12 11:24 GMT
வேதாரண்யம் அருகே கன்னிவலை வைத்து முயல் பிடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் அகஸ்தியன்பள்ளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அகஸ்தியன்பள்ளியிலிருந்து உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி செல்லும் சாலையில் அடர்ந்த புதர் பகுதியில் கன்னி வலை வைத்து முயல்கள் பிடிக்க முயற்சி செய்த அகஸ்தியன் பள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 43), ராசன்(20), கலைச்செல்வம் (20) ஆகிய மூன்று பேரையும் பிடித்து அவர்கள் முயல் பிடிக்க வைத்திருந்த கன்னி வலையையும் கைப்பற்றி அவர்களை கைது செய்து மாவட்ட வன உயிரின காப்பாளர் கலாநிதி அறிவுரையின் படி 3 பேருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News