செய்திகள்
தேவகோட்டையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
தேவகோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது சில கட்டுபாடுகளுடன் செயல்படும் மளிகை கடை, ஓட்டல்கள் பேக்கரி, டீக்கடை மற்றும் செட்டிநாடு திண்பண்டமான முறுக்கு, சீப்பு சீடை போன்ற விற்பனை செய்யும் கடைகளில் காலாவதியான உணவு வகைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.
இதில் பன், கேக், பிஸ்கட், கூல் டிரிங்ஸ் வகைகள், வாட்டர் பாட்டில்கள், லேஸ், மிச்சர், முறுக்கு, வத்தல், வெல்லம், பருப்பு வகைகள் விற்பனை தேதி முடிந்து விற்பனைக்கு வைத் திருந்தனர். காலாவதியான இந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆட்டு இறைச்சி கடைகளில் நகராட்சி முத்திரை இல்லாத கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நகராட்சியில் ஒப்படைத்து அழித்தனர்.
பாதுகாப்பு பணியில் காவல் உதவி கண்காணிப் பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், ராமச்சந்திரன், காவலர்கள் ஆரோக்கியம், இளங்கோ மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது சில கட்டுபாடுகளுடன் செயல்படும் மளிகை கடை, ஓட்டல்கள் பேக்கரி, டீக்கடை மற்றும் செட்டிநாடு திண்பண்டமான முறுக்கு, சீப்பு சீடை போன்ற விற்பனை செய்யும் கடைகளில் காலாவதியான உணவு வகைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.
இதில் பன், கேக், பிஸ்கட், கூல் டிரிங்ஸ் வகைகள், வாட்டர் பாட்டில்கள், லேஸ், மிச்சர், முறுக்கு, வத்தல், வெல்லம், பருப்பு வகைகள் விற்பனை தேதி முடிந்து விற்பனைக்கு வைத் திருந்தனர். காலாவதியான இந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆட்டு இறைச்சி கடைகளில் நகராட்சி முத்திரை இல்லாத கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நகராட்சியில் ஒப்படைத்து அழித்தனர்.
பாதுகாப்பு பணியில் காவல் உதவி கண்காணிப் பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், ராமச்சந்திரன், காவலர்கள் ஆரோக்கியம், இளங்கோ மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர்.