செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்- கார்த்தி சிதம்பரம்

Published On 2020-05-10 15:36 IST   |   Update On 2020-05-10 15:36:00 IST
தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுக்கட்டி வடபகுதியில் ஏழைகள் 500 பேருக்கு சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 45 நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஒரே நாளில் திறக்கப்பட்டன. இதனால் தான் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. பொது முடக்கத்தின் போது மதுபானக் கடைகளை தினமும் 2 மணி நேரம் திறந்து வைத்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.

என்னைப் பொருத்தவரை பூரண மதுவிலக்கு என்ற கொள்கையானது உலகம் முழுவதும் தோல்வி அடைந்திருக்கிறது. தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும். பொது முடக்கத்தால்தான் குற்றச் சம்பவங்கள் குறைந்தன. மதுபானக்கடைகள் திறப்பால் மட்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வில்லை. மதுவை தடை செய்தால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News