மானாமதுரையில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்- செர்டு சேவை மையம் வழங்கியது
மானாமதுரை:
மானாமதுரை கெங்கை நகர், கலைகூத்துநகர், மாரியம்மன் நகர் ஆகிய பகுதியில் வெளியூர்களில் சர்க்கஸ் தொழில் செய்யும் குடும்பங்கள் வின்சென்ட் நகர், சன்னதி புதுகுளம் கலைநகர் மற்றும் காட்டு நாயக்கன்குடியிருப்பு ஆகிய பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதுதவிர மானாமதுரை வைரம் அரிமா சங்கத்தினர் தினமும் 300 பேருக்கு உணவு வழங்குகின்றனர். அவர்களையும் பாராட்டி 200 கிலோஅரிசியும் வழங்கி சேவை சேய்து வருகிறார்.
கடந்த 30 வருடமாக சமூகத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களை கண்டறிந்து சிறுதொழில் செய்ய வங்கி கடன் உதவி 15 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சியால் மானாமதுரை அருகே அழகாபுரி கிராம மக்கள் எலிகறி சாப்பிட்டு வாழ்ந்து வந்ததை அரசுக்கு தெரிவித்து வீடுகள் கட்டவும் தொழில் செய்து வாழவும் சேவை செய்தேன்.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பின்தங்கிய மக்களுக்கு மாலை நேர கல்வி மையம் ஏற்படுத்தி அடிப்படை கல்வியும் கிடைக்க ஏற்பாடு செய்து உள்ளேன். ஊரடங்கு காலம் முடிந்த உடன் அரசு அனுமதி பெற்று ஏழை-எளிய மக்களுக்கு விதிமுறைகள்படி இலவச மருத்துவ சேவை செய்ய திட்டமிட்டு உள்ளேன் என்றார்.