செய்திகள்
வேலூரில் ஓட்டல் உள்பட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
வேலூரில் ஓட்டல் உள்பட 4 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பால், காய்கறி, மளிகை, மருந்து, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் குறிப்பிட்ட நாளில் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை வேலூர் மெயின் பஜாரில் அரசின் உத்தரவை மீறி செல்போன் கடை திறந்திருப்பதாகவும் பி.எம். செட்டித்தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடுவதாகவும் வேலூர் தாசில்தார் ரமேஷ், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கடைகளுக்கு சென்று சோதனை செய்ததில் அவை உண்மை என்று உறுதியானது. இதையடுத்து அந்த 2 கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இதேபோன்று தொரப்பாடியில் கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பால், காய்கறி, மளிகை, மருந்து, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் குறிப்பிட்ட நாளில் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை வேலூர் மெயின் பஜாரில் அரசின் உத்தரவை மீறி செல்போன் கடை திறந்திருப்பதாகவும் பி.எம். செட்டித்தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடுவதாகவும் வேலூர் தாசில்தார் ரமேஷ், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கடைகளுக்கு சென்று சோதனை செய்ததில் அவை உண்மை என்று உறுதியானது. இதையடுத்து அந்த 2 கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இதேபோன்று தொரப்பாடியில் கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.