செய்திகள்
கைது

வில்லியனூர் அருகே காசு வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2020-04-30 14:55 IST   |   Update On 2020-04-30 14:55:00 IST
வில்லியனூர் அருகே காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை வில்லியனூர் அருகே பொறையூர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள அங்கன்வாடி கட்டிடம் அருகே காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.

ஆனாலும் போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத், ஸ்டீபன், ஆனந்த்ராஜ் என்பது தெரியவந்தது. இதையத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News