செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பக்தர்கள் யாரும் இன்றி நடந்த திருமுலைப்பால் விழா
நாகை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடந்தது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மலைமீது உமையம்மை உடனாகிய தோணியப்பர், சட்டைநாதர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.
7-ம் நூற்றாண்டில் இத்தலத்து பிரம்ம தீர்த்த குளத்தில் அழுதுக்கொண்டிருந்த குழந்தையான ஞானசம்பந்தருக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கி பின்னர் சிவபெருமானுடன் சேர்ந்து பார்வதி தேவி காட்சிக் கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசின் உத்தரவின்படி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும் திருமுலைப்பால் பிரம்மோற்சவம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஞானப்பால் வழங்கும் ஐதீக நிகழ்வு தடைப்படக்கூடாது என்பதால் பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடந்தது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்டு திருஞானசம்பந்தர் மலைக்கோவிலில் உள்ள தோணியப்பர் சன்னதி முன்பாக எழுந்தருளினார். ஆகம விதிகளின்படி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தேவார பாடல் பதிகங்கள் பாடி, திருஞானசம்பந்தருக்கு , பொற்கிண்ணத்தில் உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
பின்னர் இந்த ஆண்டு சிவ.சந்திரசேகர ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டமும், பொற்கிழியையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பக்தர்கள் யாரும் இன்றி சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகி, சிப்பந்திகள் மட்டும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மலைமீது உமையம்மை உடனாகிய தோணியப்பர், சட்டைநாதர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.
7-ம் நூற்றாண்டில் இத்தலத்து பிரம்ம தீர்த்த குளத்தில் அழுதுக்கொண்டிருந்த குழந்தையான ஞானசம்பந்தருக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கி பின்னர் சிவபெருமானுடன் சேர்ந்து பார்வதி தேவி காட்சிக் கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசின் உத்தரவின்படி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும் திருமுலைப்பால் பிரம்மோற்சவம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஞானப்பால் வழங்கும் ஐதீக நிகழ்வு தடைப்படக்கூடாது என்பதால் பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடந்தது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்டு திருஞானசம்பந்தர் மலைக்கோவிலில் உள்ள தோணியப்பர் சன்னதி முன்பாக எழுந்தருளினார். ஆகம விதிகளின்படி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தேவார பாடல் பதிகங்கள் பாடி, திருஞானசம்பந்தருக்கு , பொற்கிண்ணத்தில் உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
பின்னர் இந்த ஆண்டு சிவ.சந்திரசேகர ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டமும், பொற்கிழியையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பக்தர்கள் யாரும் இன்றி சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகி, சிப்பந்திகள் மட்டும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.