செய்திகள்
வேதாரண்யத்தில் இருந்து லாரிகளில் தினமும் உப்பு எடுத்து செல்லலாம்- தொழிலாளர்கள் மகிழ்ச்சி
வேதாரண்யத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் உப்பு ஏற்றிச் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பயனடைவர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியாளர்கள், லாரி புரோக்கர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. நாகை கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடி அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2ம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு லாரி மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக உப்பள பகுதியில் வேலை பார்த்து வந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் 10 லாரிகளில் மட்டுமே நாள்தோறும் உப்பு செல்கிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் உப்பு மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. உப்பு ஏற்றுமதி இல்லாததால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இதையடுத்து வேதாரண்யத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் உப்பு ஏற்றிச் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பயனடைவர் என தெரிவித்தனர்.
கூட்டத்தில் தாசில்தார் முருகு, டி.எஸ்.பி. சபியுல்லா மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், லாரி புரோக்கர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியாளர்கள், லாரி புரோக்கர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. நாகை கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடி அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2ம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு லாரி மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக உப்பள பகுதியில் வேலை பார்த்து வந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் 10 லாரிகளில் மட்டுமே நாள்தோறும் உப்பு செல்கிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் உப்பு மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. உப்பு ஏற்றுமதி இல்லாததால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இதையடுத்து வேதாரண்யத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லாரிகள் வேண்டுமானாலும் உப்பு ஏற்றிச் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பயனடைவர் என தெரிவித்தனர்.
கூட்டத்தில் தாசில்தார் முருகு, டி.எஸ்.பி. சபியுல்லா மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், லாரி புரோக்கர்கள் கலந்து கொண்டனர்.