செய்திகள்
புதுவை உழவர் சந்தையில் குளவி கொட்டியதில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுவை உழவர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்களை குளவிகள் கொட்டியதில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பழைய பஸ் நிலைய வளாகத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு புதுவையை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். தேங்காய், காய்கறிகள் ஆகியவை நாள்தோறும் விற்பனை செய்யப்படும். ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுப்புற பகுதி மக்கள் அதிகளவில் காய்கறி வாங்க உழவர்சந்தையில் குவிகின்றனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுடன் வந்தனர். பொதுமக்களும் 5 மணி முதல் பொருட்களை வாங்குவதற்காக வர தொடங்கினர். சுமார் 6.30 மணியளவில் உழவர்சந்தை பின்புறம் உள்ள தாவரவியல் பூங்காவில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீரென படையெடுக்க தொடங்கியது.
உழவர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்களை திடீரென குளவிகள் கொட்ட தொடங்கியது. இதனால் உழவர் சந்தை கலவர பூமியாக மாறியது. பொதுமக்களும், வியாபாரிகளும் ஆளுக்கொரு திசைக்கு ஓடினர். சுமார் 10-க்கும் மேற்பட்டோரை குளவி கொட்டியது. இதில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் 5 பேர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஊசி போட்டுக்கொண்டு வீடுகளுக்கு திரும்பினர்.
புதுவை பழைய பஸ் நிலைய வளாகத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு புதுவையை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். தேங்காய், காய்கறிகள் ஆகியவை நாள்தோறும் விற்பனை செய்யப்படும். ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுப்புற பகுதி மக்கள் அதிகளவில் காய்கறி வாங்க உழவர்சந்தையில் குவிகின்றனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுடன் வந்தனர். பொதுமக்களும் 5 மணி முதல் பொருட்களை வாங்குவதற்காக வர தொடங்கினர். சுமார் 6.30 மணியளவில் உழவர்சந்தை பின்புறம் உள்ள தாவரவியல் பூங்காவில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீரென படையெடுக்க தொடங்கியது.
உழவர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்களை திடீரென குளவிகள் கொட்ட தொடங்கியது. இதனால் உழவர் சந்தை கலவர பூமியாக மாறியது. பொதுமக்களும், வியாபாரிகளும் ஆளுக்கொரு திசைக்கு ஓடினர். சுமார் 10-க்கும் மேற்பட்டோரை குளவி கொட்டியது. இதில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் 5 பேர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஊசி போட்டுக்கொண்டு வீடுகளுக்கு திரும்பினர்.