செய்திகள்
தற்கொலை

மனைவியை நண்பர் ஆபாசமாக பேசியதால் கார் டிரைவர் தற்கொலை

Published On 2020-03-24 10:43 GMT   |   Update On 2020-03-24 10:43 GMT
ஈரோட்டில் மனைவியை ஆபாசமாக பேசியதால் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கண்ணாடி புதூர் சிறுவலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). கார் டிரைவர். இவரது மனைவி அனு (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ராமச்சந்திரன் தனது நண்பர் காரை கவுந்தப்பாடி அய்யன் காட்டை சேர்ந்த கார்த்தியிடம் அடமானம் வைத்து ரூ. 25 ஆயிரம் பெற்றுள்ளார். நீண்ட தாமதத்திற்கு பிறகு கார்த்தியிடம் ராமச்சந்திரன் தான் வாங்கிய கடனை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்தி, ராமச்சந்திரன் மனைவி அனுவிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அனு தனது கணவர் ராமச்சந்திரனிடம் கூறி உள்ளார்.

இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் குருணை மருந்தை தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அனு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராமச்சந்திரன் இறந்தார்.

இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News