செய்திகள்
ஆம்புலன்ஸ்.

வேலூரில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

Published On 2020-03-16 16:09 IST   |   Update On 2020-03-16 16:09:00 IST
வேலூரில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

வேலூர்:

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்பாடியை சேர்ந்தவர் சுகுமார் விவசாயி. இவரது மனைவி மோனிஷா (வயது 22). கர்ப்பிணியான மோனிஷாவை மேல்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கிருந்து பிரசவத்திற்காக நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர் நகர பகுதியில் உள்ள வேலப்பாடி மெயின் ரோட்டில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மோனிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்சு உதவியாளர் சுகன்யா அவருக்கு பிரசவம் பார்த்தார்.

அப்போது ஆம்புலன்சில் மோனிஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

Similar News