செய்திகள்
விபத்து

தாளவாடி அருகே வேன் மோதி மூதாட்டி பலி

Published On 2020-03-11 09:39 GMT   |   Update On 2020-03-11 09:39 GMT
தாளவாடி அருகே வேன் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:

தாளவாடி அருகே பனக்கள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி. (வயது 64), கொங்கள்ளி கோவில் குண்டம் திருவிழாவில் இன்று அதிகாலை கலந்து கொள்வதற்காக கொங்கள்ளி வளைவு கோயில் செல்லும் ரோடு மல்லிகார்ஜுனா தோட்டம் அன்னதானப் பந்தல் அருகே சாப்பிட்டுவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த வேன் பின்னோக்கி இயக்கிய போது நடந்து சென்று கொண்டிருந்த இந்திராணி மீதி மோதியது. இதில் கீழே விழுந்த இந்திராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். உடலை பிரேத பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News