தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது.
இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட பைனாப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் (48) விவசாயி அவரது விவசாய நிலத்தில் 5 ஏக்கர் வாழை பயிர் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்துள்ளது. காலையில் தோட்டத்தில் சென்று பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தர் இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகள் மிதித்து நாசம் செய்த வாழைகளை ஆய்வு செய்தனர். இதில் யானை மிதித்து நாசம் செய்ததில் 2 ஏக்கர் வாழை சேதாரம் ஆனாது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதாரம் ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சுமார் 2 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.