செய்திகள்
ஆர்ப்பாட்டம்

ஆலங்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-05 12:12 GMT   |   Update On 2020-02-05 12:12 GMT
ஆலங்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சிவக்குமாரன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றுப் பேசினார்.

14 வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடித்திட வேண்டும். டிஏ உயர்வு நிலுவை தொகையை விரைந்து வழங்கிட வேண்டும். சீருடை தையல் கூலி நிலுவையை உடனே வழங்கவேண்டும். வரவுக்கும் -செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை அரசு ஏற்று நடத்த வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

வருகிற 10-ந் தேதி மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், இதற்குள் உரிய தீர்வு கிடைக்கவிட்டால் அடுத்ததாக மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் கோரிக்கையாக வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பாரதி, பொருளாளர் கணேசன், சிஐடியு. தலைவர் சுந்தர், செயலாளர் மெய்ய நாதன். பொருளாளர் வில்லியம் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News