செய்திகள்
கைது

ஆலங்குடியில் மதுவிற்ற 2 பேர் கைது

Published On 2020-02-04 22:04 IST   |   Update On 2020-02-04 22:04:00 IST
ஆலங்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற 2 பேரை கைது செய்தனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கும்மங்குளம் தைல மரக்காட்டில் ஆலங்குடி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது ஆலங்குடி சத்தியமூர்த்தி நகர்பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 46) என்பவர் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைபோல ஆலங்குடி அருகே உள்ள மேல நெம்மக்கோட்டை தைல மரக்காட்டில் அனுமதியின்றி மதுவிற்ற மேல நெம்மக்கோட்டை மாரிமுத்து (38)வை கைது  செய்து. அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

Similar News