செய்திகள்
சீனாவிலிருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை.
பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மக்கள் பீதி அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.