செய்திகள்
முத்தரசன்

பா.ஜ.க.வின் பாராட்டை பெறவே பெரியார் பற்றி ரஜினி பேசியுள்ளார்- முத்தரசன் பேட்டி

Published On 2020-01-29 12:48 GMT   |   Update On 2020-01-29 12:48 GMT
பெரியார் தொடர்பாக பேசும்போது யாராக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். பா.ஜ.க.வின் பாராட்டை பெறுவதற்காகவே ரஜினிகாந்த் இப்படி பேசியிருக்கிறார் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியார் தொடர்பாக பேசும்போது யாராக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். பா.ஜ.க.வின் பாராட்டை பெறுவதற்காகவே பெரியார் பற்றி ரஜினி பேசியுள்ளார். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, முதலமைச்சர் பழனிச்சாமி ஆகிய 2 பழனிச்சாமிக்கு மட்டும்தான் தெரியும்.

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாக உள்ளது. சீனாவில் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 200 மாணவர்களை மீட்பதற்கு தமிழக அரசு எவ் வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

தஞ்சை பெரிய கோவிலில் 2 மொழிகளில் குட முழுக்கு நடைபெறுவது ஏற்புடையதல்ல. தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ராணுவ பயிற்சி பள்ளி நடத்த போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது மிகவும் அபாயகரமானது.


இதற்கு முன்பு முப்படை தளபதி அரசியல் பேசியதால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இப்படி ஒரு பரபரப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஊழல் நடந்துள்ளதால் அத் தேர்வாணையத்தின் மீதான நம்பகத்தன்மையை இளைஞர்கள் இழந்து விட்டனர். எனவே முறைகேட்டில் தொடர்புடைய அலுலர்கள், அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News