செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு

Published On 2020-01-23 13:52 GMT   |   Update On 2020-01-24 01:35 GMT
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சென்னை:

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக நடிகர் விஷால், நாசர், கார்த்தி, சங்க உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  

இந்த வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் நீதிபதி கல்யாண சுந்தரம் தீர்ப்பளிக்கிறார். 

ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி சங்க உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாசர், கார்த்தி வழக்கு தொடர்ந்தனர். 

கடந்தாண்டு ஜுன் 23ம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது நாளை தெரியவரும்.
Tags:    

Similar News