செய்திகள்
திருட்டு

ஆலங்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு

Published On 2020-01-21 16:35 GMT   |   Update On 2020-01-21 16:35 GMT
ஆலங்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 22 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வேங்கி டகுளத்தைச்சேர்ந்த வடிவேல் மகன் மகாகிருஷ்ணன் (வயது26) விவசாயி. இவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்துடன் வயல் வேலைக்கு சென்று விட்டார். பின் வேலை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த  22 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருந்தது. 

இது குறித்து மகாகிருஷ்ணன் ஆலங்குடி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய் து  திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News