செய்திகள்
மணல்

வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்- கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை

Published On 2020-01-17 13:39 GMT   |   Update On 2020-01-17 13:39 GMT
செந்துறை வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் காமராஜர் மணல் டயர் மாட்டுவண்டி உரிமையாளர்கள் நலசங்கம் செயல்பட்டு வருகிறது இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் செந்துறை ஒன்றியம் ஆலத்தியூர் வெள்ளாற்றில் மணல் எடுத்து வந்தோம், ஆனால் அதிகாரிகள் இந்த குவாரியில் மணல் எடுக்க கூடாது, வேறு குவாரியில் மணல் எடுக்க அனுமதி வழங்குவதாக கோரிதடுத்து விட்டனர், இதனால் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வேறு தொழில்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம்,

எனவே செந்துறை ஒன்றியம் வெள்ளாற்று மணல் குவாரியில் மாட்டுவண்டியின் மூலம் மணல் எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News