செய்திகள்
கைது

ஆண்டிமடம் அருகே கட்டையால் தாக்கிய தொழிலாளி கைது

Published On 2020-01-07 17:41 GMT   |   Update On 2020-01-07 17:41 GMT
ஆண்டிமடம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் நபரை கட்டையால் தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தவ சிக்குழி கிராமம் வாண்டையார் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேசுக்கும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மதியழகன் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சுரேஷ் மதியழகனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கட்டையால் தலை மற்றும் உடம்பில் தாக்கியுள்ளார்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து மதியழகனின் மனைவி உமாராணி ஆண்டிமடம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.
Tags:    

Similar News