செய்திகள்
தற்கொலை செய்த திருநங்கை சுஸ்மிதா.

வாலிபருடன் காதல்- திருமணம் செய்ய மறுத்ததால் திருநங்கை தற்கொலை

Published On 2020-01-07 04:30 GMT   |   Update On 2020-01-07 04:30 GMT
ஈரோட்டில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் என்கிற சுஸ்மிதா (வயது 22) திருநங்கை ஆவார்.

தனது தாயார் வீட்டில் வசித்து வந்த திருநங்கை சுஸ்மிதாவுக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு பிறகு அது காதலாக மாறியது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர்.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்யும்படி திருநங்கை சுஸ்மிதா காதலரிடம் கேட்டுள்ளார். இதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த வாலிபர் மீது மிகுந்த நம்பிக்கையுடன் காதலித்து வந்த திருநங்கை சுஸ்மிதா வேதனை அடைந்தார்.

இந்த நிலையில் வீடடில் யாரும் இல்லாததால் திருநங்கை தனது சேலையால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News