செய்திகள்
பவானிசாகர் அணை

மீண்டும் முழுகொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை

Published On 2019-12-31 10:28 GMT   |   Update On 2019-12-31 10:28 GMT
பவானிசாகர் அணைக்கு கணிசமாக தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் முழுகொள்ளளவை 3-வது தடவையாக எட்டும் நிலையில் உள்ளது.
ஈரோடு:

தமிழகத்தின் 2-வது பெரிய அணையான பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும்.

சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2 முறை நிரம்பியது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. மேலும் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் மாவட்டம் முழுவதும் நெற்பயிர்கள் வாழை மற்றும் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து மாவட்டம் முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு அதிக தண்ணீர் வரத்து இல்லாவிட்டாலும் கணிசமாக தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1779 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 104.95 அடியாக உள்ளது. இன்று மாலை முழுகொள்ளளவை 3-வது தடவையாக எட்டும் நிலையில் உள்ளது. காலிங்கராயன் வாய்க்காலுக்கு மட்டும் வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News