செய்திகள்
தற்கொலை

கோபி அருகே முதியவர் தற்கொலை

Published On 2019-12-31 10:27 GMT   |   Update On 2019-12-31 10:27 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத வருத்தத்தில் முதியவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

திருப்பூர் மாவட்டம் பச்சாங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 64).

இவருக்கு கருப்புசாமி (43) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்தும் திருமணம் நடக்காமல் தள்ளிக்கொண்டே போனது. இதனால் மகனுக்கு திருமணம் ஆகாமல் தடைபட்டு செல்கிறதே... என்ற வேதனையில் பெரியசாமி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரியசாமி ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News