செய்திகள்
மதுபாட்டில்

நாகூர் அருகே காரில் 1440 மதுபாட்டில்கள் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2019-11-15 11:03 GMT   |   Update On 2019-11-15 11:03 GMT
நாகூர் அருகே காரில் 1440 மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் முருகவேல் அறிவுறுத்தலின்படி மது கடத்தலை தடுக்கும் வகையில் இன்று அதிகாலை நாகூர் போலீசார் மேல வாஞ்சூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்2 பேர் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 32), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும், இவர்கள் திருத்துறைப்பூண்டிக்கு காரைக்காலிலிருந்து 30 அட்டை பெட்டிகளுக்குள் 1440 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News