செய்திகள்
மரணம்

நாகை அருகே பெண் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து பலி

Published On 2019-11-12 09:44 GMT   |   Update On 2019-11-12 09:44 GMT
நாகை அருகே பெண் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகூரை அடுத்த முட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 53). இவர் நேற்று மாலை முட்டத்தில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று வயலில் மயங்கி விழுத்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கீழ்வேளூர் திருகண்ணாகுடி முதலியார் தெருவை சேர்ந்த தனசேகரன் (வயது 55) கூலி தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு பஸ்நிலையம் வந்தார். அப்போது அவர் திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர்.

இதுகுறித்து நாகூர் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News