செய்திகள்
மதுபாட்டில் கடத்தல்

நாகை அருகே சொகுசு காரில் ரூ.1 லட்சம் மதுபாட்டில் கடத்தல்- வாலிபர் கைது

Published On 2019-11-09 09:00 GMT   |   Update On 2019-11-09 09:00 GMT
நாகை அருகே சொகுசு காரில் ரூ.1 லட்சம் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் தமிழக எல்லையான நாகை அடுத்த நாகூர் சோதனை சாவடியில் நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் உள்ள மேல நாகூர் அருகே மடக்கி பிடித்தனர். இதையடுத்து காரை சோதனை செய்ததில் 1920 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து நடத்திய விசாரணையில் காரில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் மேலவாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சிலம்பரசன் (வயது 30) என்பதும் , அவர் திருத்துறைப்பூண்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1920 மதுபாட்டில்கள் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News