செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே முதியவரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2019-11-09 08:50 GMT   |   Update On 2019-11-09 08:50 GMT
வேதாரண்யம் அருகே முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வேட்டை சாரனிருப்பு, கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது62) இவர் கோவில் பத்து பஸ் நிறுத்தத்தில் இரவு பஸ்கக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியன்(29) என்பவர் முத்துவிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த முத்து நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வேட்டை காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருநானம் வழக்கில் பதிவு செய்து மருது பாண்டியனை கைது செய்தார்.

Tags:    

Similar News