செய்திகள்
தற்கொலை

தஞ்சை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-10-31 10:28 GMT   |   Update On 2019-10-31 10:28 GMT
தஞ்சை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்ணாபேட்டை திருக்குவளை கட்டளை பகுதியை சேர்ந்தவர் வேதையன். இவரது மகள் சுகன்யா (வய 21). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த வந்தார். அவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேததி வீட்டில் தனியாக இருந்த சுகன்யா தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து விட்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிசசை பலன் அளிக்காமல் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அண்ணாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News