செய்திகள்
கைது

நாகூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

Published On 2019-10-30 08:48 GMT   |   Update On 2019-10-30 08:48 GMT
நாகூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை அருகே நாகூரை அடுத்த வடகுடி சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த இளங்கோ. இவரது மனைவி திலகவதி (வயது 43) திருவாரூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 25-ந் தேதிசென்று உள்ளார். நேற்று காலை திலகவதி வீட்டில் வந்த பார்த்த போது பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்த கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 1½ பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி அவர் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அப்போது திலகவதி வீட்டில் எதிர்புறம் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமராவில் பதிவான சந்தேகப்படும் நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மெயின் ரோடு கல்விக்குழல் பகுதியை சேர்ந்த ஜெகபர் சாதிக் (வயது 30) என்பது தெரிய வந்தது. இதைய டுத்து ஜெகபர் சாதிக்கை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News