செய்திகள்
வேதாரண்யம் அருகே இளம்பெண் மர்ம மரணம்
வேதாரண்யம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வாய்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா (வயது 21). இவர் பி.காம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இளம்பெண் ரம்யா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி வாய்மேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முனியாண்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
இளம்பெண் ரம்யா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.