செய்திகள்
கைது

குத்தாலம் தொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் திருடிய வாலிபர் கைது

Published On 2019-10-24 15:15 IST   |   Update On 2019-10-24 15:15:00 IST
குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.
குத்தாலம்:

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே தேரழந்தூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 65). இவர், குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது குத்தாலத்தில் இண்டேன் கியாஸ் ஏஜென்சி மற்றும் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை முத்துக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.13 லட்சம் ரொக்க பணம் மற்றும் தங்க- வைர நகைகள் உள்பட மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மேற்பார்வையில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளைய ராஜா, ஆத்மநாதன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை செய்தனர்.

Similar News