செய்திகள்
கைது

திருப்பத்தூரில் நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2019-09-30 10:31 IST   |   Update On 2019-09-30 10:31:00 IST
திருப்பத்தூரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜே.டி. ரோடு பகுதியை சேர்ந்த மாது மகன் சத்ய குமார் (வயது 19). பர்கூரில் உள்ள அவரது மாமாவின் கறிக்கடையில் வேலை செய்து வந்தார். திருப்பத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. பர்கூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

மாணவி தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று படித்து வந்தார். இந்நிலையில் சத்யகுமாருக்கும், நர்சிங் கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

நேற்று முன்தினம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை சத்யகுமார் அழைத்து சென்றார். அப்போது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தாய் கந்திலி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு சத்யகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Similar News