செய்திகள்
செயின் பறிப்பு

கே.வி.குப்பம் அருகே நகை பறித்த திருடர்களிடம் போராடிய ராணுவ வீரர் மனைவி

Published On 2019-09-04 14:32 GMT   |   Update On 2019-09-04 14:32 GMT
கே.வி.குப்பம் அருகே ராணுவ வீரர் மனைவியிடம் நகையை மர்ம கும்பல் பறித்து சென்றனர்.
குடியாத்தம்:

கே.வி.குப்பம் அருகே வடுகந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், ராணுவவீரர். இவரது மனைவி வசந்தி (வயது35). இவர்களது வீடு விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது. வீட்டை ஒட்டியபடி உள்ள பங்க்கடையை வசந்தி கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வசந்தி கடையை அடைத்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். 

அவர்கள் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நோட்டமிட்டனர். பின்னர் திடீரென ஒருவன் வசந்தியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளான். அப்போது வசந்தி செயினை விடமாமல் போராடினார். இருப்பினும் அந்த நபர் தங்க செயினை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News