செய்திகள்
சாலை மறியல்

கஜா புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-08-28 10:07 GMT   |   Update On 2019-08-28 10:07 GMT
ஆலங்குடியில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்குடி:

கஜா புயலால் ஆலங்குடி பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 32 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி, கோவிலூர் ஊராட்சி மன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் அடையாள அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கக்கோரி கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வருவாய் வட்ட ஆய்வாளர் வெண்ணிலா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதி இருக்கும் பொருட்களை இதுவரை பெறாதவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதன் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News