செய்திகள்
கைது

கறம்பக்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

Published On 2019-08-24 11:32 GMT   |   Update On 2019-08-24 11:32 GMT
கறம்பக்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் இருந்து டிப்பர் லாரியில் மணல் அள்ளி வந்த தீத்தானிபட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரிடம் விசாரணை செய்த போது, அனுமதி இன்றி எடுத்துவரபட்ட மணல் என்பது உறுதியானது. பின்னர் அவர் மீதுவழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News