செய்திகள்
சுதந்திர தினவிழா- நாகையில் கொடியேற்றினார் கலெக்டர் சுரேஷ்குமார்
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நாகை:
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 139 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 346 ரூபாய் மதிப்பிலான வழங்கினார். பின்னர் சுதந்திர போரட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 139 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 346 ரூபாய் மதிப்பிலான வழங்கினார். பின்னர் சுதந்திர போரட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.