செய்திகள்
விபத்து

ஈரோட்டில் விபத்து- லாரி மோதி வாலிபர் பலி

Published On 2019-08-13 10:16 GMT   |   Update On 2019-08-13 10:17 GMT
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த ஆர்.என். புதூர் அமராவதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 41). ஆர்.என். புதூர் மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37). இருவரும் நண்பர்கள்.

நேற்று இரவு விஜயகுமார், சுரேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலை விசயமாக ஈரோடு வந்து கொண்டிருந்தனர்.

ஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலை தாண்டி சத்தி ரோட்டில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் விஜயகுமார், சுரேஷ் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் சுரேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News