செய்திகள்
விவசாயி தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2019-08-11 18:04 GMT   |   Update On 2019-08-11 18:04 GMT
உடையார்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 45). விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக முத்துவிடம் இருந்து அவருடைய மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முத்து தனியாக வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த முத்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் முத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக முத்துவின் உறவினர் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News