செய்திகள்
கூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேர் கைது
கூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் நாவக்கால் காலனி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக கூவத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை போலீசார் சோதனையிட்டபோது வேலு, ராமச் சந்திரன் ஆகியோர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.