செய்திகள்
கொலை

மதுகுடிக்கும் போது தகராறு: நாகை ரவுடி வெட்டி படுகொலை

Published On 2019-08-09 10:15 GMT   |   Update On 2019-08-09 10:15 GMT
மதுபோதையில் ரவுடியை அவரது நண்பர்களே வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை நடராஜப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 18). ரவுடியான இவர் மீது சாராயம் கடத்தல், நகைப்பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்குக்காக ஆஜராக நாகை கோர்ட்டுக்கு அருண் நேற்று வந்தார்.

பின்னர் நேற்று மாலை நாகை அக்கரைகுளம் உப்பனாறு அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் தனது 2 நண்பர்களுடன் அருண் மதுக்குடித்து கொண்டிருந்தார்.

சிறிதுநேரத்தில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது 2 பேர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஆற்று நீரில் தப்பி ஓடியது தெரிய வந்தது. ரவுடி அருண் சம்பவ இடத்திலேயே தலை, கை, முகம் ஆகிய இடங்களில் பலத்த வெட்டப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்னர்.

உடனே இதுபற்றி நாகை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அருண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு நின்ற பொதுமக்கள், அருணை 2 பேர் கொலை செய்து விட்டு ஆற்று நீரில் தப்பி சென்றதை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய அருணின் நண்பர்களான ராபர்ட்(22), மாதவன் (21) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேரும், அருணை கொலை செய்ததை ஒப்புக் கொண் டனர்.

அருண், தனது நண்பர்கள் ராபர்ட், மாதவன் ஆகியோர் மதுகுடிக்கும் போது  அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மது போதையில் அருணை அவர்கள் 2 பேரும் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ராபர்ட், மாதவனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News