செய்திகள்
பெருங்களத்தூர் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி
பெருங்களத்தூர் அருகே ஜி.எஸ்.டி. சாலையுடன் இணையும் பகுதிக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலந்தூர்:
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் பெருங்களத்தூர் அருகே ஜி.எஸ்.டி. சாலையுடன் இணையும் பகுதிக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று காலை ராதாகிருஷ்ணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் பெருங்களத்தூர் அருகே ஜி.எஸ்.டி. சாலையுடன் இணையும் பகுதிக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று காலை ராதாகிருஷ்ணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.